Pages

Wednesday, 25 February 2015

வயிறு எரிச்சல்...!!



அதர்மமோ,
அநியாயங்களின்
முழு உருவமோ,
மனித உயிர் கேட்கும்
மனிதமோ..??
உயிரை பலி வாங்கவே
கூலி கொடுக்கும் முதலாளித்துவம்..!


வஞ்சமோ,
சூழ்ச்சியோ,
வயிற்று எரிச்சலோ..??
உழைப்பை திருடும்
பணக்கார கூட்டத்துக்கு
ஏமாந்த உயிர் என்றால்
ன் 
முடிக்கு சமமோ...,??


குளிரூட்டப்பட்ட அறையில்
குளிர் நீர் குடித்து
கேள்வி கேட்டால்
அவன் எஜமான்..!!
சிரிக்காமல் உண்மையாக
வேலை செய்த அவனுக்கு
இளிச்சவாயன் என்ற பெயரா..??


அழுக்கில்லா நகம்,
வெடிப்பு இல்லா பாதம் என
நச்சு சுமந்த
கால்கள் கொண்டு,
தாழ்ந்தவனை
நசுக்கி மிதிக்கும்
நஞ்சுப் பாம்பு கூட்டங்கள்
அந்த கொடிய முதலாளிகள்...!!


சோறு போடும்
அவர்களின் உழைப்பை திருடி
கூறு போடும்
களவாணி கூட்டங்கள்,
அழுக்கு படிந்தவர்களை
அடிமைப் படுத்தும்
கேவலமான பிறவிகள்..!!


தலை குனிந்து
வேலை பார்த்தவனை
தலை நிமிர விட மாட்டார்கள்
இந்த முதலை முதலாளிகள்,
பசி என்றாலும்,
உயிரே போனாலும்
எதிர் கேள்வி கேட்கவிடமாட்டார்கள்
இந்த சர்வாதிகாரிகள்..!!


Thanks :  mano red 

No comments:

Post a Comment