OFFICE BEARERS : PRESIDENT:C.NAGENDRAN-9443443054 SECRETARY :K.SIVAMOORTHY - 9994240223 TREASURER: C.KARTHIKA VICE PRESIDENT: 1.S.MOHAN 2.V.CHANDRASEKAR 3.V.RAVINDRAN 4.M.KUPPAMUTHU ASST SECRETARY: 1.M.EZHILARASAN 2.R.SARAVANAN 3.R.MURUGESWARI 4.P.GANESAN ASST TREASURER:S.HABEEB ORGANIZING SECRETARY:1.S.V.PARAMASIVAM 2.S.PANDIAN 3.M.RIKHASMOHAMED

Pages

Friday 27 May 2016

WHEN INACCESSIBILITY IN 'FINACLE' EXPERIENCED, BUSINESS CHEATING PLAN (BCP) INTRODUCED BY THE DEPARTMENT TO HARASS THE LABOUR.


BUSINESS  CONTINUITY PLAN   OR
BUSINESS  CHEATING  PLAN ?
 "  இன்போசிசே வெளியேறு " 

ஊழியர்  பணியில் குறைவு  ஏற்படின் இப்போதெல்லாம் WARNING கடிதம் கூட  எந்த அதிகாரியும்  கொடுப்பதில்லை ! உடனே  குறைந்த பட்சம் விதி 16 இன் கீழ்  தண்டனை தான் ! 

"அதுவும் திருப்தி இல்லை " என்று  மேல் முறையீட்டு அதிகாரிகள்  REVIEW  செய்து  விதி -14 ஏன்  பிரயோகப்  படுத்தக்கூடாது  என்று  உடனே  நோட்டீஸ்  அளிக்கும்  கொடுமை தினம் தினம்  நாம்  பார்க்கிறோம் !.

 கேட்டால் சேவைக் குறைவை அரசாங்கமே விரும்புவதில்லை  என்ற பதில் !  உண்மையோ  உண்மைதான் ! 

ஆனால்  1100  கோடிகள்  பெற்ற  INFOSYS  நிறுவனத்தின்  கையாலாகாத தனத்திற்கும்   ஆண்டுக்கணக்கில்  தொடரும்  சேவைக் குறைவிற்கும்   எந்த தண்டனையும்  தரவேண்டும் என்று எந்த அதிகாரியும் பேசுவது கூட இல்லை ! மாறாக  சிவப்புக்கம்பள  வரவேற்புதான் ! தினம் தினம்  VIDEO  CONFERENCING  தான் ! 

செயல்படாத FINACLE  , MC  CAMISH  குறித்து செயல்பட  வைக்க  முடிவுகள் எடுக்காமல் , ஊழியர்களை மேலும் வதைத்திட  BUSINESS  CHEATING  PLAN  ( SORRY ) BUSINESS  CONTINUITY PLAN  தான் ! 

செயல்படாத சேவையை  நாட்டிலேயே முதன் முதலில்  நாம்தான்  செய்து முடித்தோம் என்று  பதக்கம் வேறு  நமக்கு  நாமே  குத்திக் கொள்கிறோம் ! நம்  கண்களை  நாமே   குருடாக்கிக் கொள்கிறோம் ! 

இந்தக்  கொடுமைகள் தீர  வேறு வழியில்லை ! இனி  பொதுமக்கள் முன்னர் பிரச்சினையை  எடுத்துச் செல்ல வேண்டியதுதான் ! 

அன்று தேசத்தை காத்திட " வெள்ளையனே  வெளியேறு  இயக்கம் "   அறிவித்தார்  மகாத்மா  காந்தியடிகள் ! 

இன்று இலாக்காவையும் பொதுமக்கள் சேவையையும்  காத்திட
" இன்போசிசே வெளியேறு  " இயக்கம் அறிவிப்போம் நாம்   ! 

அகில இந்திய அளவிலான  இயக்கம் மற்றும் வேலை  நிறுத்தத்தை நடத்திட  நம் அகில இந்திய சங்கத்தை  மாநிலச்  சங்கம் கோரியுள்ளது ! விரைவில் அதனை நாம் எதிர்பார்க்கிறோம் !  

பிரச்சினையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் தமிழகம் தழுவிய அளவில் தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில்  "இன்போசிசே வெளியேறு "  பிரச்சார  இயக்கம் நடத்திடப்படும் ! 

பிரச்சினையின் முழு வடிவமும்  பொதுமக்கள் மற்றும்   
ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் !  

சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம்  மக்கள் சபைகளில்  பிரச்சினை  தீவிரமாக கொண்டு செல்லப்படும் ! 

பொங்கி  எழுவோம்  !   புயலாக  மாறுவோம் !

No comments:

Post a Comment